<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Thanthai Periyar</title>
	<atom:link href="http://www.thanthaiperiyar.org/tamil/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.thanthaiperiyar.org/tamil</link>
	<description>Website dedicated to E.V.Ramasamy...</description>
	<lastBuildDate></lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.2.1</generator>
		<item>
		<title>திராவிடர் கழகம் கண்டார்</title>
		<link>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/</link>
		<comments>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 25 Jan 2008 12:03:33 +0000</pubDate>
		<dc:creator>ramya</dc:creator>
				<category><![CDATA[leadership]]></category>
		<category><![CDATA[politics]]></category>

		<guid isPermaLink="false">http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/</guid>
		<description><![CDATA[கடவுள் மறுப்புக் கொள்கையில் கடுகளவும் மாறாது கடமை ஆற்றியர் பெரியார். அதேபோல் பிராமணர்கள் எதிர்ப்புப் போராட்டத்தையும் எந்த நிலையிலும் கைவிடதவர். பிராமணர்கள் அடையும் சமுதாய முன்னுரிமையை பிராமணர் அல்லாதாரும் மற்றும் பின்தங்கிய வகுப்பாரும் அடைய வேண்டும் என்பதே அவர் இலட்சியமாய் இருந்தது. தன் வாழ்நாளின் இறுதிமூச்சுவரை அதற்காகவே பாடுபட்டார் பெரியார். தொடக்க காலத்தில் காந்தியடிகளின் கொள்கைளினால் கவரப்பட்டவர் பெரியார். காந்தியடிகளின் முக்கியக் கொள்கையான தீண்டாரையை அவர் பெரிதும் ஆதரித்தார். அதனால்தான் காங்கிரஸ் பேரியக்கத்தில் பெரியார் சேர்ந்தார். காந்தியடிகளின் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>கடவுள் மறுப்புக் கொள்கையில் கடுகளவும் மாறாது கடமை ஆற்றியர் பெரியார். அதேபோல் பிராமணர்கள் எதிர்ப்புப் போராட்டத்தையும் எந்த நிலையிலும் கைவிடதவர். பிராமணர்கள் அடையும் சமுதாய முன்னுரிமையை பிராமணர் அல்லாதாரும் மற்றும் பின்தங்கிய வகுப்பாரும் அடைய வேண்டும் என்பதே அவர் இலட்சியமாய் இருந்தது. தன் வாழ்நாளின் இறுதிமூச்சுவரை அதற்காகவே பாடுபட்டார் பெரியார்.<br />
<span id="more-72"></span></p>
<p>தொடக்க காலத்தில் காந்தியடிகளின் கொள்கைளினால் கவரப்பட்டவர் பெரியார். காந்தியடிகளின் முக்கியக் கொள்கையான தீண்டாரையை அவர் பெரிதும் ஆதரித்தார். அதனால்தான் காங்கிரஸ் பேரியக்கத்தில் பெரியார் சேர்ந்தார்.</p>
<p>காந்தியடிகளின் போக்கில் மாறுதல் ஏற்பட்டது. பெரியார் மனம் வருந்தினார். காங்கிரஸ் பேரியக்கத்தை விட்டு வெளியேறினார்.</p>
<p>தமிழர் இனம் தாழ்வுற்றுக் கிடக்கிறது. தமிழரின் தன்மானம் காக்கப்பட வேண்டும் என்று விரும்பினார் பெரியார். அதனைச் செயல்படுத்த சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார்.</p>
<p>சுயமரியாதை இயக்கம் அரசியல் கட்சி அல்ல. அது சமுதாய சீர்கேட்டினை அழிக்கவும் மக்களிடையே சமத்துவத்தை ஆக்கவும் எழுந்த ஓர் இயக்கம் ஆகும் சுயமரியாதை இயக்கம்.</p>
<p>பின்னர் தந்தை பெரியார் அவர்கள் பல மேலை நாடுகள் சென்றார். அங்கு நிலவி வரும் சமுதாய அமைப்புகளைப் பார்த்தார். குறிப்பாக ரஷ்ய நாட்டின் கொள்கைகள் அவரைப் பெரிதும் சிந்திக்க வைத்தன. ரஷ்யாவில் மட்டும் மூன்று மாதங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் என்பதை நாம் முன் அத்தியாயத்தில் பார்த்தோம்.</p>
<p>மேலை நாடுகள் சுற்றுப்பயணம் தந்தை பெரியாரின் உள்ளத்தில் பல புதிய சிந்தனைகளைத் தோற்றுவித்தது. எனவே அவர் சுயமரியாதை இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றலாம் என சிந்தித்தார்.</p>
<p>1932 டிசம்பர் மாதம் 28, 29 தேதிகளில் ஈரோட்டில் ஒரு கூட்டம் நடைபெற்றது. சுயமரியாதை இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றலாமா? என்பதுபற்றிய விவாதம் எழுந்தது. சுயமரியாதை இயக்கத் தொண்டர்களும் அறிஞர்களும் கலந்து பேசினர். அவரவர் கருத்தை வெளியிட்டனர்.</p>
<p>“சுயமரியாதை இயக்கத்தில் அரசியல் கொள்கை வேண்டாம். சமூக இயக்கமாகவே இருந்து வேலை செய்தால் போதும். அரசியல் இயக்கமாக மாறினால் நீதிக் கட்சியைப் போலவே இதுவும் சமூக சீர்திருத்தங்களைச் சரிவர செய்ய முடியாமற்போய்விடும்” என்று அறிஞர்கள் கருத்துத் தெரிவித்தனர்.</p>
<p>பெரியார் இக்கருத்துகளை எல்லாம் மனத்தில் இருத்திக் கொண்டார். ஏற்கெனவே சுயமரியாதைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியிலும் இருந்தனர்.</p>
<p>பின்னர் சுயமரியாதை இயக்கத்திலும் பல திட்டங்களை நீதிக்கட்சியும் ஏற்று செயல்பட்டது என்றாலும், பெரியார் எதிர்பார்த்த சீர்திருத்தங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட முடியவில்லை.</p>
<p>எனவே திராவிடர் கழகம் என்ற பெயரில் புதிய இயக்கத்தைப் பெரியார் உருவாக்கினார். 27-8-1944இல் ‘திராவிடர் கழகம்’ உருவாக்கப்பட்டது.</p>
<p>“திராவிடர் கழகம் ஓர் அரசியல் ஸ்தாபனம் இல்லை. சீர்திருத்த பிரசார ஸ்தாபனம் ஆகும்” என்று திராவிடர் கழகத்தின் இலட்சியத்தை தெளிவாக எடுத்துக் கூறினார்.</p>
<p>கறுப்புச் சதுரத்தின் நடுவில் சிவப்பு வட்டம். இதுவே திராவிடர் கழகத்தின் கொடி ஆகும். கொடியும் 1944-லியே உருவாக்கப்பட்டது. மக்கள் இழிநிலையில் வாழ்கிறார்கள் என்பதைக் குறிக்க கறுப்பு நிறம், புரட்சியைக் குறிக்க சிகப்பு நிறம்.</p>
<p>ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே பெரியார் அமைச்சரவை அமைக்க அழைக்கப்பட்டார். பதவிகளுக்கு ஆசைப்படாத பெரியார் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். மீண்டும் விடுதலை பெற்ற பின்னர் ராஜாஜி அவர்கள் பெரியாருக்குப் பதவி அளிக்க முன்வந்தார். ஆனால் பெரியார் அவர்கள் அதனையும் உதறித் தள்ளினார்.</p>
<p>பதவிகளை என்றுமே அவர் பெரிதாக மதிக்கவில்லை. மாறாக பெரியார் அவர்கள் பகுத்தறிவுக் கொள்கைகளில் எப்போதும்போல் தீவிர ஈடுபாடுகொண்டு தொண்டாற்றி வந்தார்.</p>
<p>“குருட்டு நம்பிக்கைகளை அழிவு வேலைகள் மூலம்தான் ஒழிக்க முடியும். அதற்கு மகத்தான உறுதி தெளிவு தேவை. பழிப்பிற்கும், சாவிற்கும் கவலையற்ற துணிவு உள்ளவர்களால்தான் அது முடியும்” என்று கூறுவார் பெரியார்.</p>
<p>இலட்சியவாதி பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகள் திராவிடர் கழகத்தின் வாயிலாக செயலாக்கம் பெற்றன.</p>
<p>மக்கள் விழிப்புணர்வு பெறக் காரணமாக இருந்தது திராவிடர் கழகம்.</p>
<p>சிறு கருத்து வேற்றுமையால் 1949ஆம் ஆண்டு அண்ணா திராவிடர் கழகத்தினின்று வெளியேறினார். திராவிட முன்னேற்றக் கழகம் என்று புதுக்கட்சித் தொடங்கினார். ஆனாலும் திராவிடக் கழப்பணி தொய்வின்றி தொடர்ந்தது.</p>
<p>பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் திராவிடர் கழகத்தின் தூண்களாகப் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>காங்கிரஸ் கட்சியில் பெரியார்</title>
		<link>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%95%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf/</link>
		<comments>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%95%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Fri, 25 Jan 2008 12:01:39 +0000</pubDate>
		<dc:creator>ramya</dc:creator>
				<category><![CDATA[leadership]]></category>
		<category><![CDATA[politics]]></category>

		<guid isPermaLink="false">http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%95%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf/</guid>
		<description><![CDATA[இந்திய விடுதலைப் போராட்டம் நீண்ட நெடிய வரலாற்றை உடையது. முதல் இந்தியச் சுதந்திரப் போர் 1857 இல் தொடங்கியது. அது படிப்படியாக வேகம் எடுத்தது. வீரர்கள் அடிமை விலங்கை ஒடிப்பதற்காக துடிப்புடன் செயல்பட்டார்கள். துன்பங்களைத் தாங்கிக்கொண்டார்கள். நாய்நாட்டிற்காக இன்னுயிரை நீக்கவும் தயாராயிருந்தார்கள். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையும் நாளுக்கு நாள் தீவிரமடைந்தது. இந்தச் சூழ்நிலையில் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். அவர் இந்தியா வந்து சேர்ந்த ஆண்டு 1919. ஒத்துழையாமை இயக்கம் 1919 இல்தான் தொடங்கப் பெற்றது. “ஆங்கில ஆட்சியாளர்களுக்கு, [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>இந்திய விடுதலைப் போராட்டம் நீண்ட நெடிய வரலாற்றை உடையது. முதல் இந்தியச் சுதந்திரப் போர் 1857 இல் தொடங்கியது. அது படிப்படியாக வேகம் எடுத்தது. வீரர்கள் அடிமை விலங்கை ஒடிப்பதற்காக துடிப்புடன் செயல்பட்டார்கள். துன்பங்களைத் தாங்கிக்கொண்டார்கள். நாய்நாட்டிற்காக இன்னுயிரை நீக்கவும் தயாராயிருந்தார்கள். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையும் நாளுக்கு நாள் தீவிரமடைந்தது. இந்தச் சூழ்நிலையில் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். அவர் இந்தியா வந்து சேர்ந்த ஆண்டு 1919.<br />
<span id="more-71"></span></p>
<p>ஒத்துழையாமை இயக்கம் 1919 இல்தான் தொடங்கப் பெற்றது.</p>
<p>“ஆங்கில ஆட்சியாளர்களுக்கு, ஆட்சி செய்வதில் ஒத்துழைப்பு அளிப்பது கூடாது. இதற்காக மாணவர்கள் கல்வி நிலையங்களைப் புறக்கணிக்க வேண்டும். அலுவலர்கள் அலுவலகங்களை செல்லக்கூடாது.” இதுதான் ஒத்துழையாமை இயக்கத்தின் அடிப்படைக் குறிக்கோள் ஆகும்.</p>
<p>காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை முன்னின்று நடத்தினார். முன்னதாக காந்தியடிகள், தென்னாப்பிரிக்காவில் &#8211; டர்பன் நகரில் நிறவெறிக் கொள்கையை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றவர் ஆவார். காந்தியடிகளின் கொள்கைகளாலும், சொற்பொழிவுகளாலும் ஈர்க்கப்பட்டு பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஆண்டு 1919.</p>
<p>தேசப்பிதா காந்தியடிகளும், தமிழர் தலைவர் தந்தை பெரியாரும் காங்கிரஸில் சேர்ந்து பணிபுரியத் தொடங்கிய ஆண்டு 1919.</p>
<p>மேலை நாட்டு மோகம் கூடாது என்றார் காந்தியடிகள். அந்நியநாட்டுத் துணிகளை அணியக்கூடாது என்றும் கட்டளையிட்டார். நமது நாட்டில் மிகுதியாகப் பருத்தி உற்பத்தி ஆகிறது. அந்தப் பருத்தியிலிருந்து தயாரித்த நூல் ஆடை-கதர் ஆடை ஆகும். எனவே நாம் எல்லோரும் இனி கதர் ஆடையை உடுத்த வேண்டும். ஆண்கள் கதர்சட்டை, கதர் வேட்டி, கதர் துண்டு அணிய வேண்டும். பெண்கள் கதர் புடவையும், ஜாக்கெட்டும் அணிய வேண்டும் என்றார் காந்தியடிகள்.</p>
<p>காந்தியடிகளின் கூற்றை ஏற்றார் பெரியார். கதர் உடுத்தாதவன் பதர் என்று தூற்றினார். கதரின் பெருமைபற்றி,</p>
<p>“ஏதமில காந்தியடிகள் அறச்செயல்<br />
வெல்லும் &#8211; வெல்லும் &#8211; வெல்லும்<br />
கன்னல டாஎங்கள் காந்தியடிகள் சொல்<br />
கழறுகி றேன் அதைக்கேளே &#8211; நீவிர்<br />
காதணி வீர்உங்கள் பகைவரின் வேரங்குத்<br />
தூளே &#8211; தூளே &#8211; தூளே.”</p>
<p>என்று பாடினார் பாவேந்தர் பாரதிதாசன்.</p>
<p>காந்தி சொல்லை ஏற்று பெரியார் தான் அணிந்திருந்த ஆடம்பர ஆடைகளை அகற்றினார். எளிமையும் தூய்மையும் நிறைந்த கதர் ஆடைக்கு மாறினார். கதர் நம் இந்தியத் திருநாட்டின் தேசிய ஆடை என்பதை உணர்ந்தார்.</p>
<p>பெரியார் தான் மட்டும் கதர் அணிந்ததோடு நிறைவடையவில்லை. தன்வீட்டார் அனைவரையும் கதர் அணியும்படி வற்புறுத்தினார். சுற்றத்தார், நண்பர்களுக்கெல்லாம் கதரின் பெருமையை எடுத்துக் கூறினார்.</p>
<p>நாகம்மையார் கதருக்கு மாறினார். பெரியாரின் தாயார் சின்னத்தாயம்மையார் எப்போதும் பளிச்சென்று பட்டுச்சேலைதான் கட்டுவார். அவர் கதர் சேலைக்கு மாற மனம் இடம் தரவில்லை. கதர் பட்டுப்புடவையைவிட கனமானது. அதனால் என்னால் கட்ட முடியாது என்றார் பெரியாரின் தாயார். உடனே பெரியார் தராசு ஒன்றை எடுத்தார். மற்றொரு தட்டில் பரித்திச்சேலையை (கதர்) வைத்தார். பருத்திச் சேலைதான் எடை குறைவு என்று அம்மாவுக்கு நிரூபித்துக் காட்டினார். அதன் பிறகு பெரியாரின் அம்மா கதர் சேலைதான் கட்டினார்.</p>
<p>பெரியார் ஊர் ஊராகச் சென்றார். கதரின் அருமை பெருமைகளை எடுத்துக் கூறினார். காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல, மற்றவர்களையும் கதர் ஆடை உடுத்தச் செய்த பெருமை தமிழ்நாட்டில் பெரியாரையே சாரும்.</p>
<p>கதர் இயக்கத்தை காங்கிரஸ் இயக்கத்தின் கண் என மதித்தார் பெரியார். இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ‘கதர் வஸ்திராலயங்கள்’ தோன்றுவதற்குப் பெரியாரே முழு முதல் காரணமாவார்.</p>
<p>திருச்செங்கோடு ஆசிரமமும் பெரியார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதே ஆகும். இதன் நார்வாகியாக ராஜாஜி இருந்தார்.</p>
<p>பெரியார் அவர்கள் ஒரு செயலில் ஈடுபட்டுவிட்டால் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வார். கதர்த் துணி அணிவதுபற்றிய பிரசாரத்திலும் அவ்வாறே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். கதர்த் துணிமூட்டையை தலையில் சுமந்து…. விற்று வந்தார்.</p>
<p>அடுத்ததாக பெரியார் கள்ளுக்கடை மறியலில் கவனம் செலுத்தினார்.</p>
<p>“துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்<br />
நஞ்சு உண்பார் கள் உண்பவர்”</p>
<p>என்பது தமிழ்மறை.</p>
<p>கள் குடிப்பவர்கள் இறந்தவர்களுக்குச் சம்மானவர்கள் என்று வள்ளுவர் குடியின் கெடுதலை கடுமையாக எடுத்துரைப்பார்.</p>
<p>அண்ணல் காந்தியடிகள் மது அருந்துவதின் தீமைகளை மக்களுக்கு விளக்கிக் கூறினார். பாமர மக்களும் வறுமையில் வாடுபவர்களும் மது பழக்கத்திற்கு அடிமையாகி துன்ப்ப்படுவதைக் கண்டு அண்ணல் மனம் பதைபதைத்தார்.</p>
<p>மதுவிலக்குக் கொள்கை காங்கிரஸின் முக்கியக் கொள்கையில் ஒன்றாயிற்று. வட இந்தியாவில் தென்னை மரங்களிலிருந்து கள் எடுப்பார்கள். எனவே காந்தியடிகள் ஈச்ச மரங்களையும் தேன்னை மரங்களையும் வெட்டி வீழ்த்தச் சொன்னார்.</p>
<p>காந்தியடிகள் சொல்லிவிட்டால் மறுபேச்சு பேசமாட்டார் பெரியார். தமிழ்நாட்டில் கள்ளுக்கடை மறியலை மிகப் பெரிய அளவில் நடத்திக் காட்டியவர் நந்தமிழ்ப் பெரியார்.</p>
<p>ஈரோட்டில் பெரியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு ஒன்று இருந்தது. அதில் 500 தென்னை மரங்கள் செழித்து ஓங்கி வளர்ந்திருந்தன. காந்தியடிகள் கட்டளையை ஏற்று பெரியார் அவர்கள் 500 தென்னை மரங்களையும் வேரோடு வெட்டி வீழ்த்தினார். மதுவிலக்குக் கொள்கையில் பெரியார் எடுத்த மகத்தான முடிவு இது. மாநிலமே வியந்து பார்த்தது.</p>
<p>தனக்கு என்றால் ஒருவழி; தம்பிக்கு என்றால் வேறு வழி என வாழ்ந்து வரும் இந்த நாட்டில் கொள்கைக் குன்றாகத் திகழ்ந்தார் பெரியார்.</p>
<p>கள்ளுக்கடை மறியலையும் தாமே முன்நின்று நடத்தினார் பெரியார். ஈரோட்டுத் தெருக்களில் அரசாங்கத்தின் தடை உத்தரவை மீறி 1921 இல் கள்ளுக்கடை மறியலில்ஈடுப்படார் பெரியார். இதனால் பெரியாரும் அவருடன் மறியலில் ஈடுபட்டத் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு மாதம் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.</p>
<p>பெரியார் சிறையில் அடைக்கப்பட்டதால் ஈரோடில் கலவரம் மூண்டது. ஆனாலும் அரசாங்கத்தால் கலவரத்தை அடக்க முடியவில்லை. அடக்கத்தின் அணிகலன்களாகத் திகழும் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.</p>
<p>ஆம்; பெரியாரின் அன்புத் துணைவியார் நாகம்மையார் தலைமையில் பெண்கள் கூட்டம் கூட்டமாகக் கள்ளுக்கடைமறியலில் ஈடுபட்டார்கள். பெரியாரின் தங்கை கண்ணம்மாளும் மறியலில் கலந்துபொண்டார். எழுச்சிமிக்கப் போராட்டமாக வெடுத்தது. மறியலில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்கள். இவர்களை கைது செய்தால் சிறையில் அறைகள் போதாது என்று திகைத்தார்கள் அதிகாரிகள்.</p>
<p>ஆங்கில அரசு அச்சம் கொண்டது. மது அருந்தாமலே அரசு தள்ளாடியது. வேறுவழி இன்றி தடை உத்தரவை நீக்கி ஆணை பிறப்பித்தது அரசு.</p>
<p>தேச நலம் கருதி தன் குடும்பத்தையே போராட்டக்களத்தில் இறக்கிய போர்வீரன் &#8211; புகழ்மறவர் -புத்துலக சித்தனையாளர் பெரியார்.</p>
<p>ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு அம்சம். நீதிமன்றங்களைப் புறக்கணித்தல். வழக்கறிஞர்கள் வழக்காடச் செல்லமாட்டார்கள். இதனையும் பெரியார் செவ்வனே நிகழ்த்திக் காட்டினார்.</p>
<p>பெரியார் அவர்களுக்கு சுமார் 5000 ரூபாய் வரை ஒருவரிடமிருந்து பணம் வரவேண்டியுருந்தது. அந்தப் பணம் வருகிற வழியாகத் தெரியவில்லை. இந்நிலையில் நீதிமன்றம் சென்று வழக்குத் தொடுத்தால் அந்த ரூபாயைப் பெற்றுவிடலாம். ஆனால், பெரியார் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் அவர் அந்த ரூபாயைப்பற்றிக் கவலைப்படவில்லை.</p>
<p>அதே சமயம் அப்போது சேலம் மாவட்டம் காங்கிரஸ் தலைவராக C. விஜயராகவாச்சாரி இருந்தார். அவர் பெரியாரிடம் சென்றார். அந்த 5000 ரூபாய் வசூல் செய்வதற்கா எனக்கு அனுமதி தந்து நீதிமன்றத்திற்கு ஒரு மடல் தாருங்கள், மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். மேலும் அப்பணத்தை திலகர் பெருமானின் சுயராஜ்ஜிய நிதியில் சேர்த்துவிடலாம் என்றும் எடுத்துக் கூறினார்.</p>
<p>பெரியார் சிறிதும் தயங்காது சொன்னார். “நானே வழக்காடுவதும் ஒன்றுதான். உங்களிடம் எழுதிக் கொடுத்து வழக்காடச் செய்வதும் ஒன்றுதான். இது என் கொள்கைகளுக்கு ஒத்ததல்ல. கொள்கையே பெரிது, பணம் பெரிதல்ல”.</p>
<p>விஜயராகவாச்சாரி விக்கித்து நின்றுவிட்டார்.</p>
<p>காங்கிரஸ் பேரியக்கக் கொள்கைகளிலும், உத்தமத்தலைவர் காந்தியடிகளிடமும் அசைக்க முடியாத நம்பிக்கையும் பற்றும் கொண்டிருந்தார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%95%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>பகுத்தறிவால் மாற்றியவர்</title>
		<link>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/</link>
		<comments>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 25 Jan 2008 11:55:43 +0000</pubDate>
		<dc:creator>ramya</dc:creator>
				<category><![CDATA[lessons]]></category>
		<category><![CDATA[Untouchability]]></category>

		<guid isPermaLink="false">http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/</guid>
		<description><![CDATA[நீண்ட பல ஆண்டுகளாக மனிதன் உள்ளத்தில் தொடர்ந்து பதிந்துள்ள, பழக்கமாகிவிட்ட நம்பிக்கைகள்- நினைப்புகள், சமயவழி எண்ணங்கள், சாத்திர புராணக் கருத்துகள் அனைத்தும் ஒரு மனிதனைச் சிலந்தி வலையில் சிக்கிய சிறுபூச்சியின் நிலையிலேயே சிக்கிச் செயலற வைத்திருக்கும் என்பதும், அதிலிருந்து அவனை மீட்பது எளிதன்று என்பதும் அவருக்குத் தெளிவாகத் தெரியும். இதுகாறும் ஒருவகைச் சமய நம்பிக்கையை &#8211; இன்னொரு வகைச் சமய நம்பிக்கையால், மதப்பற்றால் மாற்றியவர்களை சிலர் உண்டு என்தன்றி, மத நம்பிக்கை அடிப்படையில் வளர்ந்திட்ட சமுதாய வாழ்வை, [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நீண்ட பல ஆண்டுகளாக மனிதன் உள்ளத்தில் தொடர்ந்து பதிந்துள்ள, பழக்கமாகிவிட்ட நம்பிக்கைகள்- நினைப்புகள், சமயவழி எண்ணங்கள், சாத்திர புராணக் கருத்துகள் அனைத்தும் ஒரு மனிதனைச் சிலந்தி வலையில் சிக்கிய சிறுபூச்சியின் நிலையிலேயே சிக்கிச் செயலற வைத்திருக்கும் என்பதும், அதிலிருந்து அவனை மீட்பது எளிதன்று என்பதும் அவருக்குத் தெளிவாகத் தெரியும். இதுகாறும் ஒருவகைச் சமய நம்பிக்கையை &#8211; இன்னொரு வகைச் சமய நம்பிக்கையால், மதப்பற்றால் மாற்றியவர்களை சிலர் உண்டு என்தன்றி, மத நம்பிக்கை அடிப்படையில் வளர்ந்திட்ட சமுதாய வாழ்வை, பகுத்தறிவு அடிப்படையில் &#8211; மூட நம்பிக்கையின் சாயலின்றி மாற்றியமைத்தவர்களை இல்லை என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.<br />
<span id="more-70"></span></p>
<p>புத்தர் போன்று ஓரிருவர் பகுத்தறிவைப் பயன்படுத்திப் பல உண்மைகளை நிலைநாட்டினர் எனினும், அவர்தம் கொளைகையைப்பரப்பிடும் பணியும் சமய வடிவம் கொண்ட போது- சில நம்பிக்கைகளைக்கொண்டதாகவே நிலைப்பெற்றுள்ளத்தை அவர் அறிந்திருந்தார்.</p>
<p>ஆயினும் மத நம்பிக்கைகள் &#8211; நல்லறிவுக்கும் &#8211; தெளிவுக்கும் முட்டுக்கட்டை ஆவதை எண்ணி அவற்றை அடியுடன் நகர்த்திடும் நெறியில் தமது அறிவைப் பயன்படுத்தினார்.</p>
<p>இந்த முயற்சி &#8211; கா வெள்ளத்தால் ஏற்பட்ட பழமைப் பிடிப்பிலிருந்து, மனித உள்ளத்தை &#8211; அறிவின் துணைகொண்டு விடுவிப்பதாகும். அது எளிதன்று. பனிமலையில் ஏறுவது போன்றும் கடுமையான சோர்வினைத்தரும் அறிவுப் பணியாகும். எனினும், பெரியார் தம்மை அந்த எதிர்நீச்சல் பணிக்கே ஒப்படைத்துக்கொண்டார்.</p>
<p>அதன் இயல்பை அறிந்திருந்த காரணத்தாலேயே &#8211; அவர் எதிர்ப்பைக் கண்டு அஞ்சவில்லை. கண்டனம் கண்டு மயங்கவில்லை, தடைகள் கண்டு துவளவில்லை, பயன்குறைவு கண்டு வெகுளவில்லை.</p>
<p>கல்லாமையால் விளையும் இழப்பு பலவென்றாலும் அதனால் வாய்த்ததொரு தனிப்பெரும் நன்மை, பெரியாரின் இயற்கை மதி நுடபம், பயிற்சி முறைக் கல்வியால் மழுங்கிடும் நிலைக்கு ஆளாகாத்தும், த்த்தம் அறிவையும், அதன் தெளிவையும் நம்பாது, ஏட்டில் கற்றதை மட்டுமே நம்பி ஏற்று, அதை உரைப்பதிலேயே பெருமை தேடும் மனப்பான்மைக்கு அவர் ஆளாகாத்தும் ஆகும்.</p>
<p>ஆம்! கற்ற்றிந்த மேதைகள் எடுத்தியம்பவும், பரப்பவும் முன்வராத, முன்வரத் துணியாத கொள்கைகளுக்காக, வாதாடவும், போராடவும், பரப்பவும் பெரியார் முன்வந்தார். அதையும் பாமர மக்களுக்கு விளங்கும்படிப் பரப்ப முன் வந்தார். அதுவும் அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்பு வளையம் கட்டிய போதும் தொடர்ந்து அஞ்சாது பணிசெய்ய முன்வந்தார்.</p>
<p>எதிர்ப்பு- கண்டனம் &#8211; தாக்குதல் &#8211; கல்வீச்சு &#8211; செருப்பு வீச்சு &#8211; முதலியவற்றைச் சந்திப்பது அவருக்குப் பழக்கமாயிற்று. அதனால் மக்களின் அறியாமையே அவருக்குகப் புலனாயிற்று. அதுவே அவருக்கு, அவரது பகுத்தறிவுப் பணி எவ்வளுவு முக்கியமானது என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தி, அவரை மேலும் ஊக்கப்படுத்தியது. எதர்ப்பு &#8211; பால் பாயசம் பருகுவது போன்று அவரது ஆர்வத்தை வளர்த்தது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பெண்ணுரிமைக்கு ஒரு குரல்</title>
		<link>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d/</link>
		<comments>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 25 Jan 2008 11:54:12 +0000</pubDate>
		<dc:creator>ramya</dc:creator>
				<category><![CDATA[freedom fighter]]></category>

		<guid isPermaLink="false">http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d/</guid>
		<description><![CDATA[பெண்ண்டிமை தீர்ந்தால்தான் &#8211; மக்கள் அடிமை மனப்பான்மை நீங்கும் என்று கண்ட பெரியார் &#8211; பெண்களுக்கு மட்டும் என அவர்களை அடக்கி &#8211; ஒடுக்கிக் கட்டுப்படுத்தி வைப்பதற்காக்க் கூறப்பட்ட கருத்துகளை -அதனோடு கலந்த கற்பனைகளை எல்லாம் கண்டிக்கலானார். பெண்கள் பாவப்பிறவிகள் என்பதாக்க் கருதி அவர்களைத தேவதாசகளாக &#8211; விற்பனைப் பண்டமாக &#8211; பிள்ளை பெறும் இயந்திரமாக &#8211; தொண்டு செய்யும் தகுதியன்றி வேறு தகுதியற்றவராக &#8211; விதவையாகிவிட்டால், மறுமண உரிமை யற்றவராக &#8211; சொத்துரிமை இல்லாதவரக அடிமைப்படுத்தப்பட்டிருந்த [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>பெண்ண்டிமை தீர்ந்தால்தான் &#8211; மக்கள் அடிமை மனப்பான்மை நீங்கும் என்று கண்ட பெரியார் &#8211; பெண்களுக்கு மட்டும் என அவர்களை அடக்கி &#8211; ஒடுக்கிக் கட்டுப்படுத்தி வைப்பதற்காக்க் கூறப்பட்ட கருத்துகளை -அதனோடு கலந்த கற்பனைகளை எல்லாம் கண்டிக்கலானார்.<br />
<span id="more-69"></span></p>
<p>பெண்கள் பாவப்பிறவிகள் என்பதாக்க் கருதி அவர்களைத தேவதாசகளாக &#8211; விற்பனைப் பண்டமாக &#8211; பிள்ளை பெறும் இயந்திரமாக &#8211; தொண்டு செய்யும் தகுதியன்றி வேறு தகுதியற்றவராக &#8211; விதவையாகிவிட்டால், மறுமண உரிமை யற்றவராக &#8211; சொத்துரிமை இல்லாதவரக அடிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையை மாற்றுவதற்கான புதிய சிந்தனையை வளரச் செய்தார்.</p>
<p>புரோகிதச் சடங்குகள் நீக்கிய திருமணம்,<br />
சாதி வேற்றுமை ஒழிக்கும் கலப்புத் திருமணம்,<br />
விதவைப் பெண்ணின் மறுமணம்</p>
<p>முதலாக மனித வாழ்வில் இடம்பெறும் தலையாய திருமண நிகழ்ச்சியைச் சமுதாய மாற்றத்துக்கான உரிமை உணர்வு தழைக்கும் முறையில் நடத்தும் புதுமை வழிகண்டார்.</p>
<p>நீத்தார் நினைவு நாளாயினும், அந்நிகழ்ச்சியிலும் பகுத்தறிவுச் சிந்தனை இடம்பெறும் வழிகண்டார்.</p>
<p>மனித வாழ்க்கையின் பல்வேறு நிலைகளிலும், அனைத்து நிகழ்ச்சிகளிலும், மத்த்தின் பிடிப்பும், அதனால் ஏற்படும் மனப்பான்மையும் தகர்க்கப்படுவதுற்கு வழி காணும் பணியே அவரது பணியாயிற்று.</p>
<p>ஒழுக்கம் &#8211; நேர்மை &#8211; உண்மை &#8211; கடமை &#8211; தரும்ம் &#8211; புண்ணியம் &#8211; கல்வி &#8211; கற்பு &#8211; திருமணம் முதலான பல்வேறு பொருள் குறித்தும் &#8211; அவற்றின் அடிப்டையை &#8211; அவை மதிப்பீட்டையும் அப்படியே ஒப்புக் கொள்ளத் தேவையில்லை என்பதும், மனிதனின் அறிவு தெளிவடைய அவையெல்லாம் மறு ஆய்வு செய்யப்படவேண்டும் என்பதுமே அவரது நோக்கமாயிற்று.</p>
<p>பெரியாரின் குறிக்கோள், எல்லோரும் ஒரு குலம் &#8211; ஒரு சம்ம்- ஒரு நிறை என ஒக்கலாக வாழ்வதற்குத் தடையாக &#8211; இடையூறாக உள்ள எதனையும், அறிவு வழியில் தகர்த்து எறிந்து சமத்துவ- சுயமரியாதை வாழ்வை அனைவருக்கும் உரத்தாக்குவதே எனலாம்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சாதி ஒரு சூழ்ச்சிப் பொறி</title>
		<link>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%ae%bf/</link>
		<comments>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Fri, 25 Jan 2008 11:52:42 +0000</pubDate>
		<dc:creator>ramya</dc:creator>
				<category><![CDATA[Untouchability]]></category>

		<guid isPermaLink="false">http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%ae%bf/</guid>
		<description><![CDATA[”மனிதனை மனிதன் நெருங்க்க் கூடாது &#8211; காணக்கூடாது &#8211; தீண்டக்கூடாது” &#8211; என்கிறார்களே. யார் அவர்கள்? என்றார் பெரியார். ”மேல்சாதிக்கார்ர்கள்’ என்ற பதில் வந்தது. அப்படி மனிதனை மனிதன் இழிவுபடுத்த ஒரு மேல்சாதியா? அந்த மேல்சாதிக்கார்ன் வளர்க்கும் மாடுகளிலும் கீழோ மனிதன்? நாயினும் இழிந்தவனோ மனிதன்? அந்த மேல்சாதி ஒழிக என்றார். அவர்கள் மற்ற மனிதர்களை இழிவுபடுத்தும் அநீதியைக் கண்டித்தார். இது வருணாசிரம தருமம் அல்லவோ? நால்வகைச் சாதி முறையைத்தானே நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்? அதுவும் தவறா? என்றனர், [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>”மனிதனை மனிதன் நெருங்க்க் கூடாது &#8211; காணக்கூடாது &#8211; தீண்டக்கூடாது” &#8211; என்கிறார்களே. யார் அவர்கள்? என்றார் பெரியார்.</p>
<p>”மேல்சாதிக்கார்ர்கள்’ என்ற பதில் வந்தது.</p>
<p>அப்படி மனிதனை மனிதன் இழிவுபடுத்த ஒரு மேல்சாதியா? அந்த மேல்சாதிக்கார்ன் வளர்க்கும் மாடுகளிலும் கீழோ மனிதன்? நாயினும் இழிந்தவனோ மனிதன்? அந்த மேல்சாதி ஒழிக என்றார். அவர்கள் மற்ற மனிதர்களை இழிவுபடுத்தும் அநீதியைக் கண்டித்தார்.</p>
<p><span id="more-68"></span><br />
இது வருணாசிரம தருமம் அல்லவோ? நால்வகைச் சாதி முறையைத்தானே நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்? அதுவும் தவறா? என்றனர், வருணாசிரம மனப்பான்மையினர்.</p>
<p>அது எப்படி உண்மையாகும்? பிறப்பிலே உயர்வும் தாழ்வும் இயற்கையில் எப்படி இருக்க முடியும்? அது செயற்கைகயாக்க் கற்பிக்கப்பட்டதுதானே! சாதிப்பாகுபாடே ஒரு சூழ்ச்சிப்பொறி, முறைகேடு, அநீதி என்றார் பெரியார்.</p>
<p>அதுவே, வேதமும் ஆகமங்களும் கீதையும் உணர்த்திடும் உண்மை, &#8211; கண்ணன் படைப்பு நால்வகைச் சாதி என்றனர்.</p>
<p>அந்த வேதமும் கீதையும் அறிவுக்கு ஒத்தனவல்லவே? அவை உரைக்கும் கருத்து ஆரியத்தைக் காக்க வகுக்கப்பட்ட சதித்திட்டம் அதை ஏற்பது மடமை &#8211; எதிர்ப்பதே என் கடமை என்றார் பெரியார்.</p>
<p>இதிகாசங்கள் முதற்கொண்டு மனுநீதி சாத்திர்ம வரையில் வற்புறுத்தும் முறையாயிற்றே வருணாசிரம்ம் என்றனர். அதனால்தானே தமிழர்கள் அடிமைகளாக, தாசர்களாக ஆக்கப்பட்டனர். எனவே, அவற்றை ஒழித்தால்தான் &#8211; தமிழன் தலைநிமிர முடியும் என்றார் பெரியார்.</p>
<p>இவையெல்லாம் கடவுளின் ஏற்பாடு செய்தவன் கடவுளாகமாட்டான். இப்படிப்பட்ட கட்டளை இடுவது தெய்வம் ஆகாது. இதை மீறுவது பாவம் என்றால் நான் அதனை ஏற்கத் தயார்! என்றார் பெரியார்.</p>
<p>இதுதான் நாத்திகம், கடவுளை நம்பாதவர் பேச்சு என்றனர், ஆத்திகர்.</p>
<p>இப்படிப்பட்ட பேதங்களை வளர்க்கும் கடவுளை நம்பிவதைவிட, நாத்திகனாக இருப்பதே மேல்; நான் நயவஞ்சக ஆத்திகனாக இருக்க விரும்பவில்லை &#8211; என்றார் பெரியார்.</p>
<p>இப்படியெல்லாம் கடவுள் நிந்தனை செய்பவர்கட்கு இரவுரவாதி நரகந்தான் சம்பவிக்கும் என்றனர் வைதிகர்கள்.</p>
<p>சாதி வேற்றுமையை ஒப்புக்கொண்டு, பிறப்பிலே இழிவை ஏற்றுக்கொண்டு கண்ணுக்குத் தெரிந்த இவ்வுலகில் கருத்தறிந்தும் அநீதியை ஏற்றுக்கொண்டு, தலைமுறை தலைமுறையாக அழிவதைவிடக் கண்ணுக்குத் தெரியாத &#8211; யாருங்காட்டாத இரவுரவாதி நரகம் எவ்வளவோ மேல் என்று சுடச்சுடப் பதில் அளித்தார் பெரியார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மனித வாழ்வும் அறிவும்</title>
		<link>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 25 Jan 2008 11:51:14 +0000</pubDate>
		<dc:creator>ramya</dc:creator>
				<category><![CDATA[admire]]></category>
		<category><![CDATA[lessons]]></category>

		<guid isPermaLink="false">http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</guid>
		<description><![CDATA[தமிழ்நாட்டின் வரலாற்றில் யாருக்கும் உரித்தாகாத ஒரு தனி இடத்தைப் பெற்ற பெருமைக்குரியவர் நமது அருமைத் தந்தை பெரியார் அவர்கள். துள்ளிக் குதிக்கும் இளமைப் பருவம் முதல் எழுந்து நடக்கவே தள்ளாடும் முதுமை வரை, தாம் கண்டதையும் கேட்டதையும் கருத்தில்கொண்டு, ஆராய்ந்து நோக்கி அவற்றின் நியாய &#8211; அநிநாயங்களைப் பகுத்தறிந்து உணர்ந்து, உண்மை கண்டு, அதனை உலகோர்க்கு உணர்த்துவதையே தமது கடமையாகக் கொண்டார். அவர் இளமையில் பயின்ற ஏட்டுக் கல்வி குறைவுதான் எனினும் &#8211; தாமாகப் படிக்கக்கூடிய ஏடுகள் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>தமிழ்நாட்டின் வரலாற்றில் யாருக்கும் உரித்தாகாத ஒரு தனி இடத்தைப் பெற்ற பெருமைக்குரியவர் நமது அருமைத் தந்தை பெரியார் அவர்கள்.</p>
<p>துள்ளிக் குதிக்கும் இளமைப் பருவம் முதல் எழுந்து நடக்கவே தள்ளாடும் முதுமை வரை, தாம் கண்டதையும் கேட்டதையும் கருத்தில்கொண்டு, ஆராய்ந்து நோக்கி அவற்றின் நியாய &#8211; அநிநாயங்களைப் பகுத்தறிந்து உணர்ந்து, உண்மை கண்டு, அதனை உலகோர்க்கு உணர்த்துவதையே தமது கடமையாகக் கொண்டார்.<br />
<span id="more-67"></span></p>
<p>அவர் இளமையில் பயின்ற ஏட்டுக் கல்வி குறைவுதான் எனினும் &#8211; தாமாகப் படிக்கக்கூடிய ஏடுகள் பலவற்றையும் படித்து, அவற்றையும் தமது அறிவுகொண்டு ஆராய்ந்து, அவற்றின் நன்மையும் தீமையும் தெளிந்து மக்களுக்கு விளக்கி உரைத்தார்.</p>
<p>எப்படிப்பட்ட பெருமைக்குரியவர் கூறியதாயினும்- எவ்வளவு போற்றப்படும் ஏட்டில் கண்டதாயினும்- தமது அறிவுக்குச் சரியென்று தோன்றாத எதனையும் ஏற்க மறுத்தார் என்பது மட்டுமன்றி, எதிர்க்கவும் &#8211; கண்டிக்கவும் பின்வாங்கவில்லை.</p>
<p>எதுவானாலும் &#8211; அது ஏன்? எதற்காக? எப்படி? என்ன பயன்? என்னும் கேள்விக்கு அவற்றை இலக்காக்கினார்.</p>
<p>மனித வாழ்வு &#8211; அறிவை அடிப்படையாக்க்கொண்டே நாளும் வளர்ச்சி பெறுவது. ஆதி நாள்களில் மனிதன் எத்தனையோ துன்பங்களுக்கிடையில், உயர்க் கேடுகளுக்கிடையில், தனது அறிவைப் பயன்படுத்தி, உயிரைக் காத்துக்கொண்டு முன்னேற்றம் கண்டான். அந்த அறிவு வளர்ந்து &#8211; விரிந்து பல துறைகளில் பயின்று, ஆழ்ந்து நுணுகி ஆராயும் திறம் பெற்று, மனித வாழ்வை மேலும் மேலும் மேம்பாடு அடையச் செய்து வந்துள்ளது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>அடிமைத்தனம் அழித்தல்</title>
		<link>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/</link>
		<comments>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 25 Jan 2008 11:42:43 +0000</pubDate>
		<dc:creator>ramya</dc:creator>
				<category><![CDATA[Untouchability]]></category>

		<guid isPermaLink="false">http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/</guid>
		<description><![CDATA[ஆரிய சூழ்ச்சி வலையினின்று விடுவிக்கத் தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டார்கள். இங்கிலாந்து நாட்டிலே தோன்றிய புரட்சிக் கவிஞன் ஷெல்லி இங்கிலாந்து நாட்டு அடித்தட்டு உழைப்பாளி மக்களைக் கூவி அழைத்துக் கூறியது இது; ”உரத்த குரலில் முழங்குங்கள்! ஊழல் கொடுமை வளர்க்கும் அரியாசன்த்தின் கீழ்ச் சிக்குண்டு நலியும் அடிமை ஒவ்வொருவனும் மனிதனாகத் தலை நிமிரட்டும்! பூட்டப்பட்டுள்ள தளைகளையும் விலங்குகளையும் துன்பத்தின் முனகல் ஒலி இன்றியே துணிச்சலுடன் உடைத்தெறியட்டும்!” மேலும் ஷெல்லி சொன்னான். ”சுதந்திரம் எதுவென்பதும் அறியீர்! அடிமை நிலை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஆரிய சூழ்ச்சி வலையினின்று விடுவிக்கத் தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டார்கள். இங்கிலாந்து நாட்டிலே தோன்றிய புரட்சிக் கவிஞன் ஷெல்லி இங்கிலாந்து நாட்டு அடித்தட்டு உழைப்பாளி மக்களைக் கூவி அழைத்துக் கூறியது இது;<br />
<span id="more-66"></span></p>
<p>”உரத்த குரலில் முழங்குங்கள்!<br />
ஊழல் கொடுமை வளர்க்கும் அரியாசன்த்தின் கீழ்ச்<br />
சிக்குண்டு நலியும் அடிமை ஒவ்வொருவனும்<br />
மனிதனாகத் தலை நிமிரட்டும்!</p>
<p>பூட்டப்பட்டுள்ள தளைகளையும் விலங்குகளையும்<br />
துன்பத்தின் முனகல் ஒலி இன்றியே<br />
துணிச்சலுடன் உடைத்தெறியட்டும்!”</p>
<p>மேலும் ஷெல்லி சொன்னான்.</p>
<p>”சுதந்திரம் எதுவென்பதும் அறியீர்!<br />
அடிமை நிலை பற்றியே அறிவீர்!<br />
அந்நிலையிலேயே நெடுநாள் ஊறினீர் அன்றோ!<br />
அடிமைப் பெயரே உந்தம் பெயரோடு<br />
ஒன்றாக உறவாடி எதிரொலிப் பதன்றோ!”</p>
<p>ஆம், இவ்வாறுதான் கேட்டான்!</p>
<p>இங்கிலாந்து நாட்டு குடிமகனே!</p>
<p>உன் பெற்றோர்களும் -பிள்ளைகளும், நாளும் வறுமையில் வாடிச் செத்திட விட்டு ஏங்கித் தவிப்பதா உரிமை வாழ்வு? அடிமைத்தளையை உடைத்தெறிய நீ தலைநிமிர மாட்டாயா? என்றான் அவன்.</p>
<p>வறுமைநிலை கண்டே கொதித்தான் அவன். ஆனால், சமுதாய நிலையே &#8211; அடிமை நிலையாக ஆக்கப்பட்டுள்ள இங்கோ &#8211; பெரியார் அவர்கள் அந்த அளவு ஆத்திர்ப்படவில்லை. நியாயத்தை உணர்த்துவதற்குத்தான் வாழ்நாளெல்லாம் வாதாடினார்.</p>
<p>அதைப்போலவே, பிரஞ்சுநாட்டு ரூசோ கூறினான். மனிதன் பிற்கின்றபோது, சுதந்திரமாகத்தான் பிறக்கிறான் ஆனால், உலகில் எங்கெங்குக் காணினும் அவன் கைகள் விலங்கு பூட்டப்பட்டுக் கிடக்கிறான் என்று.</p>
<p>மனிதன் பிறக்கின்றபோது, சுதந்தரமாகத்தான் பிறந்தான். எண்ணங்களாலே விலங்கு பூட்டப்பட்டான். அந்த எண்ணங்களைப் பற்றியெல்லாம் தந்தை பெரியாரவர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தார். எனவே பருவம் பார்ப்பதும், மடி செய்வதும் தமிழன் குடிசெய்வதற்கு இடையூறு என்று வள்ளுவர் கூறிய குறள் கருத்து அடிப்படையில் &#8211; தமிழர்கள் முன்னேற மூடநம்பிக்கைகளைத் தகர்க்க வேண்டும் என்று தந்தை பெரியாரவர்கள் பருவம் பாராது, காலம் நோக்காது, கருமமே கண்ணாகப் பணியாற்றினார்கள்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>சமய வெறுப்பு ஏன்?</title>
		<link>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%af-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d/</link>
		<comments>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%af-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 25 Jan 2008 11:41:06 +0000</pubDate>
		<dc:creator>ramya</dc:creator>
				<category><![CDATA[admire]]></category>
		<category><![CDATA[Untouchability]]></category>

		<guid isPermaLink="false">http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%af-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d/</guid>
		<description><![CDATA[இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நிருபர்கள் ஆர்வத்துடன் அகோபில மடாதிபதி ஜீயரைப் போய்ப பார்த்திருக்கிறார்கள். அவரைப் பார்த்துப் பேசியுள்ளனர், ஸ்ரீரங்கம் கோயில் திருப்பணிக்காகப் பலதரப்பட்டவர்களிடத்திலேயிருந்து நன்கொடை பெற்றிருக்கின்றீர்கள். அதிலே சைவர்கள், சைவ மடாதிபதிகள், பெரிய இலட்சாதிபதிகள் எல்லாம்கூட நிதி வழங்கியிருக்கின்றார்கள். நிதியைக்கொண்டு அரங்கநாதருடைய திருப்பணிக்கு &#8211; கோபுரப்பணிக்கு அந்தப் பணத்தை எல்லாம் செலவு செய்திருக்கின்றீர்கள் என்று கூறிய பின்னர்ச் சிவன் கோயிலுக்குக் கோபுரம் கட்டப்படுமானால், வைணவர்களாக இருக்கின்ற ‘பிராமணர்கள்’ அதற்கு நிதி உதவி கொடுக்கும்படி நீங்கள் சொல்வீர்களா? [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நிருபர்கள் ஆர்வத்துடன் அகோபில மடாதிபதி ஜீயரைப் போய்ப பார்த்திருக்கிறார்கள். அவரைப் பார்த்துப் பேசியுள்ளனர், ஸ்ரீரங்கம் கோயில் திருப்பணிக்காகப் பலதரப்பட்டவர்களிடத்திலேயிருந்து நன்கொடை பெற்றிருக்கின்றீர்கள். அதிலே சைவர்கள், சைவ மடாதிபதிகள், பெரிய இலட்சாதிபதிகள் எல்லாம்கூட நிதி வழங்கியிருக்கின்றார்கள். நிதியைக்கொண்டு அரங்கநாதருடைய திருப்பணிக்கு &#8211; கோபுரப்பணிக்கு அந்தப் பணத்தை எல்லாம் செலவு செய்திருக்கின்றீர்கள் என்று கூறிய பின்னர்ச் சிவன் கோயிலுக்குக் கோபுரம் கட்டப்படுமானால், வைணவர்களாக இருக்கின்ற ‘பிராமணர்கள்’ அதற்கு நிதி உதவி கொடுக்கும்படி நீங்கள் சொல்வீர்களா? அதற்கெல்லாம் ஆதராவாகச் சொல்வீர்களா என்று கேட்டிருக்கின்றனர்.<br />
<span id="more-65"></span></p>
<p>அதற்கு ஜீயர் நான் சொல்லமாட்டேன் என்றிருக்கின்றார்.</p>
<p>மேலும் விடாமல் கேட்டார்கள்.</p>
<p>நீங்களாவது சிவன் கோயிலுக்கு நன்கொடை தருவீர்களா? என்று கேட்டிருக்கின்றார்கள். அவர் சொல்லி இருக்கின்றார் &#8211; சிவபெருமானை வழிபடுகின்ற அந்தக் கோயில்களுக்கு வைணவர்கள் பணம் தரக்கூடாது. நானும் தரமாட்டேன். ஏனென்றால், எங்களுடைய ஆண்டவர்களிலே வெங்கடாசல பதியோ, ஸ்ரீரங்கநாதரோதான் உயர்ந்தவர்கள். சிவன் இருக்கிறானே; சுடலையைக் காக்கும் பேர்வழி. அந்தச் சிவபெருமானுக்காக்க் கட்டப்படும் கோயிலுக்காக்க் பணம் கொடுப்பது என்பது ஸ்ரீமத் நாராயணமூர்த்தியிடம் நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பாதிப்பதாகும். அது பாவமான காரியம் என்றாராம். இங்கே ‘பிராமணர்’களின் மாநாட்டிலே ஐயர் ஐயங்கார்களெல்லாம் ஒன்றாக வேண்டும் என்பது ஒரு கருத்து. வைணவர்கள் சிவன் கோயிலுக்குப் பணம் தரக்கூடாது என்பது இன்னொரு நிலை.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%af-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>நியாயம் கேட்டவர் பெரியார்</title>
		<link>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/</link>
		<comments>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/#comments</comments>
		<pubDate>Fri, 25 Jan 2008 11:39:24 +0000</pubDate>
		<dc:creator>ramya</dc:creator>
				<category><![CDATA[admire]]></category>
		<category><![CDATA[Untouchability]]></category>

		<guid isPermaLink="false">http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/</guid>
		<description><![CDATA[கணவன், மனைவியை அடிமையாக நடத்தக்கூடாது என்று கூறிய பெரியார், ‘பிராமணர்’களுக்கு மற்றவர்கள் அடிமையாக இருக்க ஒத்துக்கொள்வார் என்று கருத இடமேது? அதனால்தான் என்றைக்கும் பிராமணர்கள் மற்ற வகுப்பார் மீது குதிரை ஏறலாம்; அதற்குத் தமிழன் தோள் என்றைக்கும் தயாராக இருக்கும் என்று எண்ணிவிடவேண்டாம் என்றார். அப்படிப்பட்ட தந்தைப் பெரியாரவர்களைவிட நியாயப் புத்தி படைத்தவர்கள் வேறு யார் இருக்கிறார்கள்? வேறு யார் இருந்தார்கள்? கலப்பு மணம் செய்யலாம் என்று சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் அவர்களே எழுதவில்லையா? கலப்பு மணம்; காதல் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>கணவன், மனைவியை அடிமையாக நடத்தக்கூடாது என்று கூறிய பெரியார், ‘பிராமணர்’களுக்கு மற்றவர்கள் அடிமையாக இருக்க ஒத்துக்கொள்வார் என்று கருத இடமேது?</p>
<p>அதனால்தான் என்றைக்கும் பிராமணர்கள் மற்ற வகுப்பார் மீது குதிரை ஏறலாம்; அதற்குத் தமிழன் தோள் என்றைக்கும் தயாராக இருக்கும் என்று எண்ணிவிடவேண்டாம் என்றார்.</p>
<p><span id="more-64"></span></p>
<p>அப்படிப்பட்ட தந்தைப் பெரியாரவர்களைவிட நியாயப் புத்தி படைத்தவர்கள் வேறு யார் இருக்கிறார்கள்? வேறு யார் இருந்தார்கள்?</p>
<p>கலப்பு மணம் செய்யலாம் என்று சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் அவர்களே எழுதவில்லையா? கலப்பு மணம்; காதல் மணத்தைப்பற்றி ஒரு கட்டுரையிலே அவர் சொல்கிறார்;-<br />
கலப்பு மணம் என்பது ஓர் இளைஞனும், ஓர் இளம் பெண்மணியும் ஏதோ ஓர் இடத்தில் தடீர் என்று சந்தித்து, சந்தித்த காரணத்தினாலே இயற்கை உணர்ச்சியால் காதல் தூண்டப்பட்டுக் காதலிலே அவர்கள் ஈடுபட்டு, பின்னர் ஒருவரை ஒருவர் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிற நிலைமை ஏற்பட்டு, மன உறுதி இல்லாமல் ஒருவரை ஒருவர் கைவிட்டுப் போய்விடக் கூடாது. ஒருவரை ஒருவர் பார்த்துப் பழகிப் புரிந்துகொண்டு, வருகிற கஷ்ட நஷ்டங்களை ஏற்றுக் கொள்ளலாம் என்று நம்பிக்கை ஏற்பட்டால், எந்த சாதிப் பெண் எந்த சாதி ஆணைத் திருமணம் செய்து கொண்டாலும் வரவேற்க்க்கூடியதுதான் என்று இராசாசி அவர்களே எழுதியுள்ளார்.</p>
<p>இராசாசி அவர்கள் குடும்பத்தில் கலப்பு மணமும் நடைப்பெற்று இருக்கிறது.</p>
<p>இராசாசி அவர்கள் சொன்னதைப் பெரியார் சொன்னால் கசக்கிறதா? இராசாசி சொன்னதை நாங்கள் ஒப்புக்கொண்டோமா என்று பார்ப்பன நண்பர்கள் கேட்க்கூடும்.</p>
<p>அவர்கள் ஒப்புக்கொண்டார்களோ இல்லையோ &#8211; அவர்களுடைய சமுதாயத்திலே 100 க்கு &#8211; 5 சதவீதம் கலப்பு திருமணம் நடைபெறாமலா இருக்கிறது?</p>
<p>நான் அளவிட்டுச் சொல்வது ஒப்புக்கொண்ட திருமணங்களைத்தான்; முடியாத திருமணங்களை அல்ல.</p>
<p>எனவே, காலத்தை உணர்ந்து முற்போக்காகத் தங்களுடைய சமுதாயத்தை பாதுகாத்துக்கொள்ள நினைக்ககூடிய ‘பிராமண’ நண்பர்கள் மற்றவர்ள் முன்னேறுவதற்கு வழிவிடவேண்டாமா? அவர்கள் வழி கூட விடவேண்டா; சிவன்கோயில் ந்ந்தியாக இருக்கலாமா?</p>
<p>அவர்கள் நந்தியாக இருந்தால் இந்த ந்ந்தன்கள் என்றைக்குமே திருக்கோயிலுக்குள் போய்ச் சேரமாட்டார்கள் என்ற நினைப்பா? அந்தக் காலத்து நந்தன், ‘நந்தியே வழிவிடு வழிவிடு என்றான்.</p>
<p>இந்தக்காலத்து நந்தன் நந்திமீது ஏறிக்கொண்டு அதையே ஓட்டிக்கொண்டு போய்விடுவான்? நிலைமை மாறியுள்ளது!</p>
<p>காலம் மாறுகிறதல்லவா? மாறுகிற காலத்தை உணருகின்ற ஆற்றல் பெற்றிருந்த காரணத்தினால்தானே பிராமணர்களை எல்லாம் அறிவாளிகள் என்று பெரும்பாலோர் நினைத்துக் கொண்டிருந்தனர். இன்றைக்ககு அதை ஏற்பார் இல்லையெனினும் இந்தக் காலத்தின் மாற்றத்தை ஏற்க மறுப்பது பயன்தருமா?</p>
<p>பார்ப்பனர்களுக்குள்ளேயாவது முதலில் சாதி வித்தியாசம் தொலையட்டும். அவர்களுக்கிடையிலேயாவது அர்த்தமில்லாத மூடநம்பிக்கைகள் ஒழியட்டும். அவர்களாவது ஒன்றாக ஆகித் தொலையட்டும். அவரகளைப் பார்த்தாவது மற்றவர்களுக்குப் புத்தி வரட்டும் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது எனக்கு.</p>
<p>இங்கே முக்குலத்தோர் என்பவருள் முப்பத்து மூன்று சாதிகள் இருக்கின்றன.</p>
<p>முத்தரையர் என்று நாற்பத்தெட்டு முத்தரையர் இருக்கின்றனர்.</p>
<p>முதலியாரிலே எழுபத்தெட்டு முதலியார் இருக்கின்றனர். பிள்ளைமாரிலே ஐம்பத்திரண்டு பிள்ளைமார்கள் இருக்கின்றனர்.</p>
<p>பள்ளர், பறையர், அருந்ததியரிலே &#8211; அறுபத்தெட்டு வகை இருக்கிறார்கள்.</p>
<p>ஆக, இந்த நாடு நலம்பெற வேண்டுமானால், பார்ப்பனர்களாக இருக்கின்ற அவர்களாவது சாதிப்பெயர் வேற்றுமையின்றி ஒன்றுபட்ட்டும்.</p>
<p>உங்களிடையே உள்ள வேற்றுமையை முதலில் ஒழியுங்கள் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஆதிக்க வெறுப்பு</title>
		<link>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/</link>
		<comments>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/#comments</comments>
		<pubDate>Fri, 25 Jan 2008 11:38:05 +0000</pubDate>
		<dc:creator>ramya</dc:creator>
				<category><![CDATA[Untouchability]]></category>

		<guid isPermaLink="false">http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/</guid>
		<description><![CDATA[பார்ப்பன ஆதிக்கத்தை மட்டுமே பெரியார் கண்டிக்கவில்லை. சைவ சமய ஆதிக்கத்தையோ, வைணவ சமய ஆதிக்கத்தையோ தமிழர்களான மடாதிபதிகளின் ஆதிக்கத்தையோ பெரியாரவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. திருக்கோயில் பெயரால் உருவாக்கப்பட்டு நடைபெறும் ஆண்டவன் ஆதிக்கத்தைக்கூட கொள்கை நோக்கிப் பெரியார் ஏற்றுக்கொள்ளவில்லை. தொழில், வாணிக, ஆலை முதலாளித்துவ முறையின் ஆதிக்கத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஜமீன்தார், இனாம்தார், மிட்டா மிராசுகளின் பரம்பரை ஆதிக்கத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. தெளிவாக்க் கூறுவதானால், எந்த ஓர் அரசாங்கத்தினுடைய ஆதிக்கத்தையுங்கூடப் பெரியார் ஏற்றுக்கொள்ளவில்லை. பின் பிராமணர்களுக்கு மட்டும் பெரியாரவர்கள் எப்படிப்பட்ட நியாயயம் வழங்குமுடியும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>பார்ப்பன ஆதிக்கத்தை மட்டுமே பெரியார் கண்டிக்கவில்லை. சைவ சமய ஆதிக்கத்தையோ, வைணவ சமய ஆதிக்கத்தையோ தமிழர்களான மடாதிபதிகளின் ஆதிக்கத்தையோ பெரியாரவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.</p>
<p>திருக்கோயில் பெயரால் உருவாக்கப்பட்டு நடைபெறும் ஆண்டவன் ஆதிக்கத்தைக்கூட கொள்கை நோக்கிப் பெரியார் ஏற்றுக்கொள்ளவில்லை.</p>
<p><span id="more-63"></span><br />
தொழில், வாணிக, ஆலை முதலாளித்துவ முறையின் ஆதிக்கத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை.</p>
<p>ஜமீன்தார், இனாம்தார், மிட்டா மிராசுகளின் பரம்பரை ஆதிக்கத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை.</p>
<p>தெளிவாக்க் கூறுவதானால், எந்த ஓர் அரசாங்கத்தினுடைய ஆதிக்கத்தையுங்கூடப் பெரியார் ஏற்றுக்கொள்ளவில்லை.</p>
<p>பின் பிராமணர்களுக்கு மட்டும் பெரியாரவர்கள் எப்படிப்பட்ட நியாயயம் வழங்குமுடியும் என்று நினைக்கிறீர்கள்? எதிர்பார்க்கிறீர்கள்?</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.thanthaiperiyar.org/tamil/2008/01/25/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

